கீழக்கரை, உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சன்னதி அருகில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்தார். பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனர்.