Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முன்னோருக்கே முன்னுரிமை! பாட்டுக்கு வழிவிட்ட நதி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2017
04:01

*இன்ப துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. எதையும் தாங்கும் இதயம் மனிதனுக்கு இருந்து விட்டால்  ஆயுள் முழுவதும்  அமைதியுடன் வாழ  முடியும்.
*பசுக்கள், வேதங்கள், கற்பு நெறி தவறாதவர், சத்தியவழி நடப்பவர், துறவியர், தர்ம சிந்தனை கொண்டவர் ஆகியோரால் தான் இந்த பூமிப்பந்து இடைவிடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.
*நிலவால் இரவுப்பொழுது பிரகாசம் அடைகிறது. சூரியனால் பகல்பொழுது ஒளி பெறுகிறது. நல்ல பிள்ளையால் அவன் பிறந்த குடும்பம் விளங்குகிறது. செய்த தர்மத்தால் மண்ணுலகமும், விண்ணுலகமும் ஒளி பெறுகிறது.
*நல்ல குணமுள்ள மனைவி, குழந்தை மழலை பேசும் மகிழ்ச்சி, அரசவையில் கிடைக்கும் மதிப்பு, உழைப்பில் கிடைத்த செல்வம் ஆகியவை தேவாமிர்தத்திற்கு ஈடான சிறப்பு கொண்டவை.
*பசிக்கு உணவும், தாகத்திற்கு நீரும் அளிக்கின்ற தானத்திற்கு இணையானது இல்லை.
*ஆறுமுறை பூமியை வலம் வருதல், பத்தாயிரம் முறை காசியில் நீராடல், நுõறு முறை ராமேஸ்வரத்தில் குளித்தல் போன்ற புண்ணிய பலன்கள், பெற்ற தாயை
ஒருமுறை வணங்கினாலே கிடைத்து விடும்.
*பாம்புக்கு பால் வார்த்தாலும், அது விஷத்தையே கொடுக்கும். கீழ்த்தரமான மனிதர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களால் தீமையே உண்டாகும்.
*நல்லவர்களின் நட்பால் வாழ்வில் அமைதி உண்டாகும். வாக்கில் இனிமை சேரும். மக்கள் மத்தியில் கவுரவம் கூடும்.
*வாழ்நாள், பணம், இளமை இவை அனைத்தும் நிலையில்லாதவை. ஆனால் செய்த தர்மம், அதனால் கிடைத்த புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
*கணவரின் கருத்தறிந்து நடக்கும் மனைவி, பெற்றோரை நேசிக்கும் பிள்ளை,
சுகதுக்கத்தில் சேர்ந்திருக்கும் நண்பன் இந்த மூவரும் மேன்மையானவர்கள்.         
*தீப்பந்தம் கீழ் நோக்கிப் பிடித்தாலும் அதன் சுடர் மேல் நோக்கியே எரியும். அதுபோல உயர்ந்த மனம் படைத்தவர்கள் செல்வநிலையில் தாழ்ந்திருந்தாலும் எண்ணத்தால் உயர்ந்து நிற்பர்.     
*காய்கறி தோட்டமிடுபவன் செடி கொடிகளுக்கு சேதம் இல்லாமல் காய்கறிகளைப் பறிப்பது போல, மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வரி வசூலிப்பதே நல்ல அரசின் அடையாளம்.
*உயிருக்கு ஆபத்து நேரும் போதும், தன்னிடம் உள்ள செல்வத்தை அபகரிக்கும் போதும் மனிதன் பொய் சொல்வது குற்றம் ஆகாது.
*தவம் செய்ய காட்டுக்குப் போகவோ, பட்டினி கிடக்கவோ வேண்டாம். வீட்டில் இருந்து மனைவி, மக்களுடன் வாழ்ந்தாலே அது  தலைசிறந்த தவம் தான்.
*பிறர் குற்றங்களை மன்னிப்பது மனிதத்தன்மை. மன்னித்ததோடு மறந்து விடுவது தெய்வத்தன்மை. இந்த இருதன்மையும் பக்தியால் பெற முடியும்.
*நல்லவர்களின் கோபம் மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும். ஆனால், பாமர மனிதர்களின் கோபம் பிறவி முழுவதும் தொடரும்.
*வயது தளர்ந்த காலத்தில் மற்றவர்கள் படும் துன்பத்தை சிந்தித்துப் பார்த்தால் போதும். இளமைக்காலத்தை பயனுள்ளதாக்கும் வழியைக் கற்றுக் கொள்ள முடியும்.
*மற்றவரை மேலேற்றும் ஏணி, தான் மேலே செல்லாது.  ஆனால் உபதேசம் செய்பவன்,  தானும் அதைக் கடைபிடித்து உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்துபவனாக இருக்க வேண்டும். (மகான் வாரியார்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar