ஆண்டிபட்டி: நக்கலக்கரடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு விழா நடந்தது. விநாயகர், கருப்பசுவாமி,கன்னிமார் தெய்வங்களுக்கு எண்ணெய் காப்பு, சந்தன காப்பு, குங்குமம், விபூதி, பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.