பதிவு செய்த நாள்
24
ஜன
2017
10:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், அம்மன் சன்னதியில் புதியதாக தங்க கொடி மரம் நிலை நிறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 2002ல் கும்பாபி ேஷகம் நடத்தப்பட்டது. மீண்டும் கும்பாபி ேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 2015 ஜனவரி, 26 அன்று பாலாயத்துடன் திருப்பணி தொடங்கியது. 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது, 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் பிப்., 6 அன்று மஹா கும்பாபி ேஷகம் நடத்த உள்ள நிலையில், பழுதடைந்த உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து உபயதாரர் மூலம், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வேலுார் மாவட்டம், திருப்பத்துார் வனப்பகுதியிலிருந்து, மூன்று டன் எடையுள்ள, 48 அடி உயரம் தேக்கு மரம் கொண்டு வரப்பட்டு, கொடி மரம் செய்யப்பட்டது. முருகன் ஸ்பதி தலைமையில், கொடிமரம் பொருத்தும் பணி, பத்து நாட்களாக நடந்து வந்த நிலையில், நேற்று நிலை நிறுத்தப்பட்டது. கொடி மரத்தின் மேல், செப்பு தகடு பொருத்தப்பட்டு, அதன் மேல் தங்க முலாம் பூசப்பட உள்ளது. இப்பணி ஓரிரு நாளில் முடிவடையும்.