சிங்கம்புணரி: சிங்கம்புணரி முக்கந்தர் தெரு சுயம்பு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்தும் விழா நடந்தது. 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்பட்டது. அம்மன், ஆதிஷேசன் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஜன. 22ம் தேதி யாகசாலை பூஜைகள் நடந்தது. ஜன, 23 ம் தேதி 2ம் கால பூஜை நடத்தப்பட்டு அம்மனுக்குவெள்ளி அங்கி சாத்தப்பட்டது. அருணகிரி சிவாச்சாரியார், சேவற்கொடியோன் பூஜைகளை நடத்தினர். ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குரு சண்முகவேல் செய்திருந்தார்.