காளையார்கோவில்; காளையார்கோவில் ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐயப்பா சுவாமி கோயில் கும்பாபிேஷக விழா ஜன 18 ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று காலை 6:30 மணிக்கு நான்காவது கால யாக பூஜை,கெஜபூஜை,கோ பூஜை, மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. 9:00மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. ஸ்தானிகம் வீரமணி சாஸ்திரி தலைமையிலான சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க 9:10 க்கு சுவாமி விமானங்களுக்கு புனித நீர் ஊற்றினர். 9:35 மணிக்கு ஐயப்பசாமி, கருப்பர், வலம்புரி சித்திவிநாயகர், பாலமுருகன் ஆகிய பரிவார மூலவர்களுக்கு புனிதநீர் ஊற்றினார்கள். மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை,தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.தேவகோட்டை ஜமீன் நாராயணன் செட்டியார், சோழபுரம் ராமநாதன் செட்டியார், முன்னாள் ஊராட்சி தலைவர் போஸ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வட்டார ஐயப்பா பக்தர்கள் செய்துவந்தனர்.