உடுமலை: உடுமலையில் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உடுமலை சங்கிலி நாடார் வீதியில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த, 19ம் தேதி காலை, 7:00 மணிக்கு மங்கள இசை, கணபதி, நவக்கிரக ஹோமத்துடன் கும்பாபி ஷேக பூஜைகள் தொடங்கின. நேற்றுமுன்தினம் விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யா விசஷே சாந்தி, பூத சுத்தி, மற்றும் இரண்டாம்கால யாக வேள்வியுடன் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கியது. இரவில் மகாதீபாராதனையும் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓதி கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பத்ரகாளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜையும் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.