பதிவு செய்த நாள்
13
பிப்
2017
12:02
துணிவுடன் செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே!
சூரியன் 10-ம் இடத்திற்கு வருவதால் நன்மை அதிகரிக்கும். செவ்வாய் பிப்.26 வரையும், புதன் பிப்.15க்கு பிறகும், குரு மார்ச் 9க்குப் பிறகும் நற்பலன் அளிப்பர். சுக்கிரனால் மாதம் முழுவதும் நற்பலன் உண்டாகும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் சிரமம் உண்டாகாது. குடும்ப வாழ்வில் நினைத்தது நிறைவேறும். சுக்கிரனால் பணப் புழக்கம் அதிகரிக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேர யோகமுண்டாகும். கணவன்-, மனைவி இடையே அன்பும், இணக்கமும் அதிகரிக்கும். குரு மார்ச் 10ல் வக்ரம் அடைந்து கன்னி ராசிக்கு மாறுவதால் குடும்பத்தில் குதுõகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதாக நிறைவேறும். பொருளாதார வளம் பன்மடங்கு அதிகரிக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க யோகமுண்டு. பிப்.28, மார்ச்1ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மார்ச் 11,12ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம் கவனம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். கண், வயிறு தொடர்பான பிரச்னை மறையும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.
தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறும் மாதமாக அமையும். கடந்த
காலத்தில் இருந்த விரயம் பிப்.16க்கு பிறகு இருக்காது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் சிறப்பான வளர்ச்சி அடையும். பிப்.16,17,18ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. பகைவரை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். ஆனால் மார்ச் 2,3,6,7,8ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். மார்ச் 5க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். மாதத் தொடக்கத்தில் வேலைப்பளு
அதிகரித்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும். பணிச்சுமை பிப்.16க்கு பிறகு குறையும். பணியில் திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டு பெறுவர். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பிப்.26,27ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை பிப்.26க்குள் கேட்டுப் பெறுவது நல்லது.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.
அரசியல்வாதிகள் பிப்.26க்கு பிறகு தொண்டர்களின் வகையில் செலவழிக்க நேரிடலாம். உங்கள் புகழுக்கு எந்த பங்கமும் வராது. எதிர்பார்த்த பதவியை அடைய விடாமுயற்சி தேவை. பிப்.14,15, மார்ச் 13ல் மனக்குழப்பம் உருவாகி மறையும்.
மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். பிப்.16 முதல் புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் நிச்சயம் கிடைக்கும். போட்டியில் பங்கேற்று விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். நண்பர்களால் இருந்த பிரச்னை மறையும். குரு மார்ச் 10 முதல் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நன்மையளிக்கும்.
விவசாயிகள் பழவகைகள், பயறு வகைகள், எள், கரும்பு போன்ற பயிர்கள் மூலம்
வருமானம் அதிகரிக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புண்டு. புதிய நிலம் வாங்கும் எண்ணம் பிப்.26க்குள் நிறைவேறும். கடந்த கால உழைப்பின் பலன் வந்து சேரும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்க பெறுவர். அக்கம் பக்கத்தினர்
அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பிப்.16க்கு பிறகு
சிறப்பான பலன் பெறுவர். மார்ச் 9,10ல் சிறப்பான நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. புத்தாடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி வரப்பெறலாம். மார்ச் 2,3 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிப்.19,20ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 4,5ல் திடீர் வருமானம் இருக்கும்.
நல்ல நாள்: பிப்.16,17,18,19,20,26,27,28, மார்ச் 1,4,5,9,10
கவன நாள்: பிப். 21,22,23 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் வீண்விவாதங்களை
தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: வெள்ளை, சிவப்பு, நீலம்
பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது அவசியம். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுங்கள்.