பதிவு செய்த நாள்
13
பிப்
2017
12:02
எதிலும் சாதனை படைத்துக் காட்டும் விருச்சிக ராசி நேயர்களே!
இந்த மாதமும் சுக்கிரன் சாதகமான இடத்தில் உள்ளார். புதன் பிப். 16-ல் இருந்து மார்ச் 5- வரையிலும், செவ்வாய் பிப்.26-க்கு பிறகும் நன்மை தருவார்கள். குரு மார்ச் 10-ல் வக்கிரம் அடைந்து சாதக இடமான கன்னிராசிக்கு மாறுகிறார். பணவரவு சிறப்பாக இருக்கும். பக்தி உயர்வு மேம்படும். குரு பார்வையால் மனதில் இருந்த நீங்காத வருத்தம், வீண் அலைச்சல் முதலியன மார்ச் 10-க்கு பிறகு மறையும். குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பிப்.14,15, மார்ச் 13-ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் பிப்.26,27ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். இந்நாட்களில் அவர்களிடம் இருந்து விலகி இருக்கவும். பிப்.19,20-ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப்.26-க்கு பிறகு அபார ஆற்றல் பிறக்கும். நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். கோரிக்கைகள் நிறைவேறும்.
தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டியாளர்கள் வகையில் இருந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன பிப்.16-க்கு பிறகு மறையும். வரவு-,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் ஓரளவு கை கொடுக்கும். தொழில் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் வகையில் இடர்பாடுகள் அதிகரிக்கும். பிப்.16,17,18,21,22,23-ல் சந்திரனால் தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம் என்பதால், இந்நாட்களில் வரவு செலவு விஷயங்களை நீங்களே நேரடியாகக் கண்காணிப்பது நல்லது. மார்ச் 2,3-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மார்ச் 5-க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
பணியாளர்கள் மற்றவர்களிடம் வேலையை ஒப்படைக்காமல், உங்கள் பணியை நீங்களே பார்ப்பது, வர இருக்கும் பிரச்னைகளைத் தடுக்கும். பிப்.13 மார்ச் 11,12-ல் சலுகைகள் கிடைத்தல், விரும்பிய இடமாற்றம் உள்ளிட்ட சுபமான பலன்களை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். பிப்.26-க்கு பிறகு தனியார் துறையில் வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். புதிய பதவி தேடி வரும். மார்ச் 5-க்கு பிறகு ஐந்து நாட்கள் வேலை காரணமாக வெளியூர் செல்லும் நிலை வரலாம். வேலைப்பளு அதிகமாக இருக்கும். இந்நாட்களில் உங்கள் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் வைக்க வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். மார்ச் 10-ந் தேதிக்கு பிறகு குரு சாதகமாக இருப்பதால், இந்த பிரச்னைகள் தீர்ந்து சாதகமான சூழல் ஏற்படும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். சக கலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
அரசியல்வாதிகள் புதிய பதவியோடு பணவரவையும் காணலாம். பிப்.25, மார்ச் 1-ல் மன குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் சிறப்பான நிலையைக் காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை
கைகொடுக்கும். பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கல்வியில் வளர்ச்சி பெற கிரகச்சூழல் உள்ளது. சிரத்தை எடுத்துப் படித்தால் இது சாத்தியமாகும்.
விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மாதப்
பிற்பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். செலவுகள் குறையும். வருமானம் அதிகரிக்கும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் பல்வேறு முன்னேற்றங்களைக் காணலாம். தோழிகளின் உதவி கிடைக்கும். வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் கிடைக்கும். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். மார்ச் 4,5-ல் சிறப்பான பலனை காணலாம். சகோதரிகளால் நற்சுகம் ஏற்படும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பிப்.24,25-ல் புத்தாடை, நகை வாங்கலாம். பக்கத்து வீட்டாரின்
தொல்லையில் இருந்து விடுபடலாம். வேலை செய்யும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். குடும்பத்தோடு புனிதத்தலங்களுக்கு சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. உடல்நலம் சீராக இருக்கும்.
நல்ல நாள்: பிப்.13,14,15,19,20,24,25, மார்ச் 2,3,4,5,11,12,13
கவன நாள்: மார்ச் 6,7,8- சந்திராஷ்டமம். இந்த நாட்களில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட எண்: 5,8 நிறம்: பச்சை, மஞ்சள்
பரிகாரம்: தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். நரசிம்மர் வழிபாடு நலம் தரும். செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். குலதெய்வத்தை வணங்க மறந்து விடாதீர்கள்.