சனி, சுக்கிரனால் கிடைத்து வரும் நற்பலன்கள் இந்த மாதமும் தொடரும். குரு வக்கிரமாகி இடம் மாறி இருப்பதால் அவரால் ஏற்பட்ட பொருள் நஷ்டம், மன சஞ்சலம் முதலிய பலன்கள் குறையும். மார்ச் 10ல் அவர் வக்கிர நிவர்த்தி அடைந்து சாதகமான இடத்திற்கு வருவதால் அவரால் ஏற்பட்ட பிரச்னைகளும் நீங்கி விடும். செவ்வாய் பிப்.26- வரை நற்பலனைத் தருவார். பக்தி உயர்வு மேம்படும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். குலதெய்வ வழிபாடு நடத்த சிறந்த மாதம். இந்த மாதத்தில் குலதெய்வத்திற்கு விசேஷ பூஜை செய்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும் யோகமிருக்கிறது. குருவால் மார்ச் 10-க்கு பிறகு மனமகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். நினைத்த திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும் பொன், பொருள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிப்.19,20-ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும். பிப்.24,25-ல் பெண்களால் நற்பலனை எதிர் நோக்கலாம்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடந்த சில நாட்களாக ஏற்பட்ட பண விரயம் அகலும். புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். பிப்.13,14-ல் எதிர்பாராத வகையில் விற்பனை அதிகரித்து பணம் கொட்டும். ஆனால் பிப்.21,22,23,26,27-ல் போட்டி அதிகரிக்கும். கொள்முதலில் தடைகள் வரலாம். இந்நாட்களை பொறுமையாக நகர்த்துங்கள். மார்ச் 5-க்கு பிறகு போட்டியாளர்களின் இடையூறு சோதனை தரும் வகையில் இருக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் சுக்கிரனால் உங்களின் முனனேற்றம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. உயர்அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்ற பீதி மறையும். அலுவலகத்தில் சக பணியாளர் கோரிக்கைகளுக்காக நீங்கள் போராடி கெட்ட பெயர் எடுக்க வேண்டாம். குரு 10ல் இருப்பதால் சிலருக்கு மனக்கவலை வரலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். பிப்.16,17,18 ஆகிய நாட்களில்- கோரிக்கை வைத்தால் வெற்றிகாணலாம். இந்நாட்களில் அலுவலகத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். மார்ச் 5-க்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சுமாரான பலனைக் காண்பர். பிப்.26-க்கு பிறகு போதிய வருமானம் இருந்தாலும் எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பது அரிது.
மாணவர்களுக்கு படிப்பு வகையில் சிறு பின்னடைவு ஏற்படும். ஆனால் கெட்ட சகவாசத்தோடு திரிந்தவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கல்வியில் சிறக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள் எள், கரும்பு, கோதுமை, பழவகைகள் மூலம் நல்ல மகசூலைப் பெறுவர். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் பிப். 26-க்குள் பத்திரம் முடிப்பது நல்லது.
பெண்கள் குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவர். குடும்பத்தாருடன் இருந்த பிரச்னை, உறவினர்கள் வகையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு முதலியன மறையும். கணவரின் அன்பு கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும். வேலையில் இருக்கும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். மார்ச் 9,10-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் பணஉதவி செய்வர். உடல்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் கண் விஷயத்தில், பயணத்தின் போது பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும்.
நல்ல நாள்: பிப். 14,15,21,22,23,24,25,28 மார்ச்1,4,5,13
கவன நாள்: பிப்.13, மார்ச்,11,12- சந்திராஷ்டமம். இந்நாட்களில் பண விஷயத்தில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் ஈடுபடவும்.
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். தினமும் குலதெய்வத்தை வணங்க மறந்து விடாதீர்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். இடர்பாடுகள் நீங்கி நன்மை அதிகரிக்கும்.செவ்வாய்க் கிழமை மாரியம்மனை வழிபட தவறாதீர்கள்.
மேலும்
பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »