பதிவு செய்த நாள்
14
பிப்
2017
01:02
வரும், 24ம் தேதி, கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில், 112 அடி உயர ஆதியோகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட விருக்கிறது. இந்த சிலை, சர்வதேச அளவில் மிகப்பெரிய திருமுகமாய் இருக்கும். ஒரு மனிதன் தன் வாழ்வின் முடிவான, மிகச்சிறந்த ஒரு ஆற்றலை அடைய, 112 வழிமுறைகள் உள்ளதை குறிக்கும் விதமாக, இந்த பிரம்மாண்ட சிலை அமையும்; அதைப்பற்றிய சிறு தொடர் இங்கே துவங்குகிறது. உலகிலேயே மிகப் பெரிய திருமுகம் இவரை ஏன் முதல் யோகி என்கிறோம்? சிவா என்னும் சொல் பலருக்கு பல அர்த்தங்கள் கொடுப்பதாய் அமைந்துள்ளது. இது, பல பரிமாணங்களுக்கு அர்த்தம் தருகின்ற வார்த்தை. சிவாவைத் தீவிரமான துறவியாக வர்ணிக்கின்றனர். அவர் விழிப்புணர்வின் உச்சத்தில் இருக்கிறார். அவரை சுந்தரமூர்த்தி என்று வர்ணிக்கும் அதேநேரம், அதிபயங்கரமான பைரவ ரூபியாகவும் வர்ணிக்கின்றனர். இப்படியே வர்ணனைகள் நீண்டு கொண்டே செல்லும்... ஆனால், ஆன்மிகப் பாதையில் உள்ளவர்களுக்கு அவர் ஒரு வெறும் யோகி மட்டுமல்ல, அவர்தான் ஆதியோகி, ஆதிகுரு.