பதிவு செய்த நாள்
14
பிப்
2017
01:02
சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் நாறும்பூநாதர் கோவிலில், ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக, தென்மண்டல தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், பழவூர் கிராமம், நாறும்பூநாதர் கோவிலில் இருந்த, 13 ஐம்பொன் சிலைகள், 2016 ஜூன், 18ல் கொள்ளை போயின. இவ்வழக்கை, சிலை கடத்தல் பிரிவு, ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் விசாரித்து வருகிறார். சிலை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட, சர்வதேச கடத்தல் மன்னன், சுபாஷ் சந்திரகபூர், 2016 டிசம்பரில் கைது செய்யப்பட்டான். தற்போது, நான்காம் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், தென்மண்டல தொல்லியல் துறை இயக்குனர் சத்தியபாமா தலைமையில், தொல்லியல் ஆய்வுக் குழுவினர், நேற்று, நாறும்பூநாதர் கோவிலில் ஆய்வு செய்தனர்.