மதுரை: மதுரை இம்மையில் தன்மை தருவார் கோயில் வளாகத்தில் மீனாட்சி அம்மனின் மக நட்சத்திரத்தை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. வழக்கறிஞர் அனந்தபத்மநாபன் தலைமை வகித்தார். மகாலட்சுமி துவக்கி வைத்து பெண்கள் சக்தி என்ற தலைப்பில் பேசினார். மாநில பொதுச் செயலாளர் சுந்தரவடிவேல், செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட தலைவர் இல.அமுதன் கலந்து கொண்டனர்.