சிவன் கோயிலில் எலுமிச்சை மரம் தலவிருட்சமாய் இருப்பதாக கேள்விப்பட்டதுண்டா? காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள திருமாகறல் தலத்திலுள்ள திருமாகறலீஸ்வரர் கோயிலில் எலுமிச்சை மரமே தலவிருட்சம். இம்மரத்தின் பழங்களைக் கொண்டுதான் ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்கோயிலில் காலபைரவர் அர்த்தநாரி பைரவராகக் காட்சி தருவது அதிசயம். பைரவராக ஒரு பாதியும், பைரவியாக மறுபாதியுமாக இவரை தரிசிக்கலாம்.