ஈரோடு அருகேயுள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலிலுள்ள மிகப் பழமையான வன்னி மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய்க்காது. இந்த மரத்தின் இலையைத் தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெட்டுப்போகாது. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது, காவிரி தீர்த்தத்தில் இந்த இலையைப் போட்டுத்தான் பக்தர்கள் பாத யாத்திரையாகக் கொண்டு செல்கிறார்கள்.