உத்தராஞ்சல் மாநிலத்தில் சரயூ ஆற்றுக்கும் ராம் கங்கா ஆற்றுக்கும் இடையே பூமிக்கடியில் இயற்கையே உருவாக்கிய குகைக்கோயில் ஒன்று அமைந்துள்ளது. இதன் பெயர் பட்டால் புவனேஸ்வரர் கோயில். ஆதிசேஷன் படம் எடுத்தாடும் வடிவம் போன்று அமைந்துள்ள இக்கோயிலில் நுழைவது பாம்பு வடிவத்தின் உள்ளே சென்று வரும் அனுபவத்தை ஏற்படுத்துகிறதாம்.