குமரன்மலை என்ற தலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. அங்கு சிறிய மலையில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் பாலதண்டாயுதபாணி. இவர் பழநி முருகப்பெருமானைப் போன்று இடுப்பில் கை வைக்காமல், கைகளை தொங்கவிட்டபடி தரிசனம் தருகிறார். இங்கே உள்ள மலையில் பாதத்தை வரைந்து நேர்த்திக்கடன் செலுத்தினால் வாத நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.