பெங்களூருவில் உள்ள பஸவன்குடியில், சிவபக்த கண்ணப்ப தேவாலயம் என்ற கோயில் உள்ளது. அதன் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் பாறையிலேயே பெரிய விநாயகர் வடிவத்தைச் செதுக்கி இருக்கிறார்கள். அவருக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கரிப்பது போலவே செந்தூரப் பொடியில் அலங்காரம் செய்து, மல்லிகைப் பூமாலை சாத்துகிறார்கள். இப்பிள்ளையாரிடம் பக்தர்கள் வெண்ணெய் சாத்துவதாக வேண்டிக்கொண்டால், நம் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்.