காசிமா நகரில் வாழும் அன்னை அன்ன பூரணிக்கு 16 திருநாமங்கள் உண்டு. அவை நந்தினி, மேதினி, பத்ரா, கங்கா, பஹுரூபா, திதிக்ஷா, மாயா, ஹேதி, ஸ்வாஸா, ரிபுஹந்திரி, அன்னதா, நந்தா, பூர்ணா, ருசிநேத்ரா, ஸ்வாமிசித்தா, ஹாஸினி எனப்படும். அன்னபூரணி விரதத்தை முறையாகச் செய்து முடிப்பவர்கள் நிறைவாக இதழ்கள் அடர்ந்த ஒரு தாமரை மலரை எடுத்து அதன் இதழ்களில் மேற்குறித்த 16 பெயர்களையும் விரலால் எழுதி, நைவேத்தியம் படைத்து தூப, தீபம் காட்டி விரதத்தை முடிக்கவேண்டும் என்கிறது விரத மகாத்மியம்.