மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்24 துவங்குகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2017 04:02
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்24 துவங்குகிறது.
200 க்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். தேனிமாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலங்களில் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் ஒன்றாகும். இக்கோயிலில் பூட்டிய கதவிற்கு மட்டும் பூஜை செய்யப்படுகிறது. பூஜை செய்வதற்கு முன்பாக தேங்காய் உடைக்கப்படுவது இல்லை. ஆண்டு முழுவதும் பக்தா்கள் வழங்குகின்ற நெய் மூலம் 24 மணி நேரமும் அணையா விளக்கு எரிகின்றது. இக்கோயில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி அன்று திருவிழா துவங்கி ஒருவாரம் நடக்கும். மதுதை, திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். நடப்பு ஆண்டு சிவராத்திரி நாளை வெள்ளிக்கிழமை விழா துவங்குகிறது. இதற்காக பக்தா்கள் கோயிலுக்கு சிரமம் இன்றி வந்து செல்வதற்கு வசதியாக பெரியகுளம், தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
தடையில்லா மின்சாரம் மற்றும் தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் சுழற்றி முறையில் 24 மணி நேரமும் பணி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவதானப்பட்டி பேரூராட்சி சாா்பில் துப்புரவுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. பக்தா்கள் அச்சமின்றி கோயிலுக்கு வந்து செல்ல தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டா் முத்துக்குமாா் தலைமையின் 200 க்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.மேலும் பக்தா்களின் வருகை சி.சி.டிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.