Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்குடி கோயில் உண்டியலில் பழைய ... சிவன்மலை பெட்டியில் மஞ்சள், குங்குமம்: மங்கள காரியமம் கை கூடும்! சிவன்மலை பெட்டியில் மஞ்சள், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்24 துவங்குகிறது
எழுத்தின் அளவு:
மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்24 துவங்குகிறது

பதிவு செய்த நாள்

22 பிப்
2017
04:02

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்24 துவங்குகிறது.

200 க்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். தேனிமாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலங்களில் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் ஒன்றாகும். இக்கோயிலில் பூட்டிய கதவிற்கு மட்டும் பூஜை செய்யப்படுகிறது. பூஜை செய்வதற்கு முன்பாக தேங்காய் உடைக்கப்படுவது இல்லை. ஆண்டு முழுவதும் பக்தா்கள் வழங்குகின்ற நெய்  மூலம் 24 மணி நேரமும்  அணையா விளக்கு எரிகின்றது. இக்கோயில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி அன்று திருவிழா துவங்கி ஒருவாரம் நடக்கும். மதுதை, திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். நடப்பு ஆண்டு சிவராத்திரி  நாளை வெள்ளிக்கிழமை  விழா துவங்குகிறது. இதற்காக பக்தா்கள் கோயிலுக்கு சிரமம் இன்றி வந்து செல்வதற்கு வசதியாக பெரியகுளம், தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

தடையில்லா மின்சாரம் மற்றும் தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் சுழற்றி முறையில் 24 மணி நேரமும் பணி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவதானப்பட்டி பேரூராட்சி சாா்பில் துப்புரவுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. பக்தா்கள் அச்சமின்றி கோயிலுக்கு வந்து செல்ல தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டா் முத்துக்குமாா் தலைமையின் 200 க்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.மேலும் பக்தா்களின் வருகை சி.சி.டிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar