பதிவு செய்த நாள்
24
பிப்
2017
10:02
திருக்கோவிலுார்: திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம்சுரத்குமாரின் ஆராதனை விழாவின் நிறைவாக ஹோமங்கள் நடந்தன. திருவண்ணாமலையில் அமைந்துள்ள, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், பகவானின், 16ம் ஆண்டு ஆராதனை விழா, நேற்று முன்தினம் துவங்கியது. ஆராதனை விழாவின் நிறைவு நாளான நேற்று காலை, 6:30 மணிக்கு, அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, நித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில், தீர்த்தநாராயண பூஜை நடந்தது. 11:00 மணிக்கு, பக்தர்களின் பஜனை, மாலை, 4:30 மணிக்கு, குழந்தை சம்பந்தன் என்ற தலைப்பில் திருவாசக உரை நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, சங்கர நாராயணன் பரத நாட்டியம் இரவு, 8:00 மணிக்கு, பகவானின் உற்சவ மூர்த்தியுடன் வெள்ளி ரதத்தில் ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஆசிரம தலைவர், ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.