ராமேஸ்வரம்: மாசி அமாவாசையை முன்னிட்டு பிப்.,26ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி விழா பிப்., 17 முதல் 28 வரை நடக்கிறது.
இந்நிலையில் மாசி அமாவாசையையொட்டி பிப்.,26 மதியம் 1:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடானதும் கோயில் நடை அடைக்கப்படும். இரவு 8:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் கோயில் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம பூஜை நடக்கும். அன்று மதியம் 1:00 மணி முதல் இரவு வரை கோயிலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை, என கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.