மதுரை: மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில், அருட்பெருஞ்சோதி ஆண்டவர், வள்ளலார் தைப்பூச விழா நடந்தது. வெங்கடராமன் சன்மார்க்க கொடி ஏற்றி வைத்து, விழாவை துவக்கி வைத்தார். சேகர் ராமநாதன், ராமசந்திரன், சிவசங்கர், சீனிவாசன் ராஜா மற்றும் ஹார்விபட்டியில் நடந்த தைப்பூச விழாவில் ஓய்வு பெற்ற மின் பொறியாளர் ராஜாராமன், சுப்புராஜ் பங்கேற்றனர்.