சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2017 11:02
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பத் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவானது மார்ச் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் தெப்பத் திருவிழா 7 நாட்கள் நடைபெறுகிறது. பார்த்தசாரதிக்கு 3 நாட்களும், மற்ற எம்பெருமான்களுக்கு ஒவ்வொரு நாளும் எனத் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. நேற்று (26ம் தேதி) முதல் 28ம் தேதி வரை பார்த்தசாரதி சுவாமி தெப்பமும், மார்ச் 1ம் தேதி நரசிம்மர் தெப்பமும் நடைபெறும். தொடர்ந்து மார்ச் 2ம் தேதி ரங்கநாதர் தெப்பமும், 3ம் தேதி ராமர் தெப்பமும், 4-ம் தேதி வரதராஜர் தெப்பமும் நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளனர்.