பதிவு செய்த நாள்
27
பிப்
2017
05:02
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த செட்டியக்காடு கிராமத்தில் உள்ளது அர்த்தநாரீஸ்வரர் கோயில். இந்தியாவில் திருச்செங்கோடுக்கும் அடுத்தப்படியாக மூலவர் அர்த்தநாரீஸ்வரர் இங்கு மட்டுதான் உள்ளது இக்கோயிலின் சிறப்பு.
இவ்வாலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நான்கு கால பூஜைகள் நடந்தது. இதில், ஓவ்வொரு கால பூஜையின் போது மஞ்சள், அரிசிமாவு, திரவியபொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நார்த்த சார், எழுமிச்சை, சார், இளநீர், சந்தனம், கலசாபிேஷகம் உள்ளிட்ட அபிேஷகம் ஆராதனை நடந்தது. ஒவ்வொரு கால பூஜையின் இடைவெளியில் ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டு அன்னதானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நான்காம் கால அபிேஷகத்துக்கு பின் வெள்ளி கவசத்தில் அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயிலானது பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டிணம் செல்லும் வழியில் நான்காவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. விழா ஏற்பாடுகளை நாடிமுத்து ஸ்வாமிகள், கிராமத்தினர் செய்திருந்தனர்.
தொடர்புக்கு 7639085399.