நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2017 12:02
நத்தம்: நநத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆண்டு தோறும் நடைபெறும் நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா மதுரை, சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் பிரபலமானது. இந்தாண்டு விழாவையொட்டி, இன்று சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கரந்தமலையில் இருந்து கன்னிமார் தீர்த்தம் கொண்டு வருவர். தொடர்ந்து நத்தம் சந்தனக்குப்பு கோயிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மாயம்மன் கோயிலில் காப்புக்கட்டி பக்தர்கள் விரதம் துவங்குவர்.
இன்று முதல் தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். மார்ச் 12 அன்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நட்ககிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 14 அன்று பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். இதை தொடர்ந்து இளைஞர்கள் பங்கேற்கும் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் பூப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி சுகாதாரப்பணிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் செய்து வருகின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.