பதிவு செய்த நாள்
28
பிப்
2017
12:02
பழநி; பழநி ஞானதண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் தங்கம்-570 கிராம், வெள்ளி-5,400 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்-377, ரொக்கம் ரூ.ஒருகோடியே 16 லட்சத்து 54ஆயிரத்து 405 கிடைத்துள்ளது. இதில் பழைய செல்லாத ரூ.500, ரூ.1000 மற்றும் புதிய ரூ.500, ரூ.2000நோட்டுகள், பத்துரூபாய் நாணயங்கள் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளியிலான வேல், உருவம், பாதம் உள்ளிட்ட பொருட்களும் கிடந்தன. இணை ஆணையர் ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம் மற்றும் கோயில் பணியாளர்கள், வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.