பதிவு செய்த நாள்
28
பிப்
2017
12:02
ஏகனாம்பேட்டை: ஏகனாம்பேட்டை கிராமத்தில், கேட்பாரின்றி கிடந்த சிவன் கோவிலை, கோவில் சீரமைக்கும் குழுவினர் சீரமைத்துள்ளனர். விரைவில் வழிபாட்டுக்கு வரும் என, கூறப்படுகிறது. காஞ்சிபுரம் அடுத்த, ஏகனாம்பேட்டை கிராமத்தில், பல்லவர் காலத்து சிவன் கோவில் புதர் மண்டி இருந்தது. கோவில் கருவறையில் இருந்த மூலவர் சிவ லிங்கங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. மிகப்பெரிய ஆலமரங்கள் முளைத்து, கோவில் சீரழிந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், சிதிலமடைந்த கோவில்களை புதுப்பிக்கும் குழுவினர், சேதமடைந்த கோவிலை ஆய்வு செய்து, சீரமைத்துள்ளனர். விரைவில், வழிபாட்டிற்கு கொண்டு வரப்படும் என, கூறப்படுகிறது.
இப்போது தான் தெரிகிறது: இந்த சிவன் கோவில், எந்த காலத்தில் கட்டப்பட்ட கோவில் என தெரியவில்லை. கிராமவாசிகளும் அப்படியே விட்டு விட்டனர். இடிந்த கோவில்கள் புனரமைக்கும் குழுவினர் வந்த பிறகு தான், இங்கு ஒரு சிவன் கோவில் உள்ளது என, தெரிகிறது. அதை சீரமைத்து வழிபாட்டிற்கு கொண்டு வரும் பணியிலும் இறங்கியுள்ளது. டி.லோகநாதன், ஏகனாம்பேட்டை