சேத்தியாத்தோப்பு: கீரப்பாளையம் அடுத்த ஆயிப்பேட்டை ஆஞ்சனேயர் கோவிலில் நேற்று மாசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. சேத்தியாத்தோப்பு கீரப்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள 27 அடி உயர ஆஞ்சனேயர் கோவில் மாசி மாத அமாவாசையையொட்டி மூலவர் ராம பக்த ஆஞ்சனேயருக்கு பால், நெய், சந்தனம், குங்குமம், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியப்பொடி உள்ள 27 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 27 அடி உயர ஆஞ்சனேயருக்கு துளசி மாலையும், மூலவர் ராம பக்த ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றி மகா தீபாராதனை நடந்தது.