பதிவு செய்த நாள்
01
மார்
2017
12:03
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 10ல் தேரோட்டம் நடக்கிறது.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று காலை 1 மணிக்கு நடைதிறக்கபட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், சிறப்பு பூஜைகள் , ஆகியவற்றை தொடர்ந்து அதிகாலை 05:43 மணியளவில் திருவிழா கொடியேற்றபட்டது. மார்ச் 5 ல் இரவு 7.30 மணிக்கு தீபாராதனை, சுவாமி, அம்பாள் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. மார்ச் 7 ல் சுவாமி, அம்பாள் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளல் நடக்கிறது. மாலையில் குமரவிடங்கபெருமான் தங்க சப்பரத்தில் வீதியுலா வருகிறார். முக்கிய நிகழ்வான மாசித்தேரோட்டம் மார்ச் 10 ம்தேதி நடைபெறுகிறது.
தேரோட்டம் : மார்ச் 8ல் காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி வீதியுலா, பகல் 11.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது. மார்ச் 10 ல் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளுகின்றனர். பின்னர் தேர்கள் வீதி வலம் வருகிறது. மார்ச் 11 ல் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.