பதிவு செய்த நாள்
04
மார்
2017
11:03
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில், நேற்று வெள்ளிக்கிழமையை ஒட்டி, மாரியம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்யப்பட்டது. சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. வாரத்தில், செவ்வாய், வெள்ளி மற்றும் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று வெள்ளிக்கிழமையை ஒட்டி காலை, 7:30 மணிக்கு சுயம்பாக உள்ள மாரியம்மனுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் உட்பட 30 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. அதற்கு பின்புறம் உள்ள மாரியம்மன் சிலைக்கு சந்தனம் அலங்கராம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சூலக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், வெளியூரைச் சேர்ந்த எராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.