மேற்கு வங்காளத்தில் மகாசிவராத்திரி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் அன்று முழுவதும் பட்டினியிருந்து கங்கைக் கரையில் களிமண்ணால் நான்கு சிவலிங்கங்கள் செய்வார்கள். அதற்கு அன்றிரவு நான்கு முறை (3 மணி வீதம்) அபிஷேகம் செய்வார்கள். முதலில் ஒரு சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம். இரண்டாவது சிவலிங்கத்துக்கு தயிர், மூன்றாவது சிவலிங்கத்துக்கு நெய், நான்காவது சிவலிங்கத்துக்கு தேனாலும் அபிஷேகம் செய்து, சிவராத்திரி இரவு முழுவதும் கண் விழித்திருப்பர். அடுத்த நாள் காலை பூஜை, அன்னதானம், உபந்யாசங்கள் கேட்டபின் தங்கள் உபவாசத்தை முடித்துக் கொள்வர்.