குரு என்றால் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி நினைவுக்கு வருவார். அதுபோல தேவகுருவான வியாழனும், அசுரகுருவான சுக்கிரனும் நினைவுக்கு வருவர். புராண இதிகாசங்களை இயற்றிய வியாசரை அனைவருமே குருவாகக் கொள்வர். சாத்திரங்களின் பொருளை மாணவர்களுக்கு போதிப்பவர் போதகுரு ஆவார். தத்துவார்த்தங்களை விளங்கக் கூறுபவர் வேத குரு.