பொதுவாக, செவ்வாய்க்கிழமை என்பது புருஷ வாரம். இன்றைய காலங்களில் நாம், செவ்வாய், சனி ஆகிய கிழமைகளை கண்களை மூடிக்கொண்டு விலக்குகிறோம். சாஸ்திரம் அப்படிச் சொல்லவில்லை. இன்னின்ன வாரத்தை (கிழமையை) புருஷ வாரம், ஸ்திரீ வாரம் என்று சொல்கிறது. ஞாயிறு, செவ்வாய், வியாழன் இம்மூன்றும் புருஷ வாரம். இம்மூன்றிலும், பும்ஸவனம், சீமந்தம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். வெள்ளி ஸ்திரீ வாரம், புதன், சனி ஆகிய இரண்டும் நடுவில் சேர்ந்தது. சனிக்கிழமைகளில்தான் சுப காரியங்கள் செய்யக் கூடாது என்று சாஸ்திரம் விதிக்கிறதே தவிர, மற்ற கிழமைகளில், எந்தெந்தக் காரியம் என்பதைப் பொறுத்து, என்னென்ன கிழமை என்று சாஸ்திரம் விதித்துள்ளது.