மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2017 10:03
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மைதருவார் கோவிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிவபெருமான் தனது ஆத்மலிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து அதை தானே பூஜை செய்வது வேறெங்கும் இல்லாத சிறப்பு. இங்கு மாசிப்பெருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் இன்று(9ம் தேதி) வேத மந்திரம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் ஐதீக நிகழ்ச்சிகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்களும், ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகிகளும் செய்தனர்.