பதிவு செய்த நாள்
13
மார்
2017
03:03
ரகசியத்தை காப்பதில் வல்லவரான மீன ராசி அன்பர்களே!
6 ல் இருக்கும் ராகு, 7 ல் இருக்கும் குரு, ராசியில் சுக்கிரன் மூவராலும் நன்மை உண்டாகும். 2ல் இருக்கும் செவ்வாய் ஏப்.11ல் 3ம் இடத்திற்கு மாறுவது சாதகமான பலனைக் கொடுக்கும். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதாரம் மேம்படும். ராகுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும். குருவால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். மக்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் கையில் கூடும். ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். எந்த பிரச்னையிலும் சிக்காமல் பாதுகாப்பாக நடந்து கொள்வீர்கள். புதனால் குடும்பத்தில் அவ்வப்போது பிரச்னை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைக்கும். சகோதரிகளால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். மார்ச் 27,28,29 ல் அவர்களால் நன்மை கிடைக்கும். மார்ச் 23,24ல் உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். ஏப்.3,4ல் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். ஏப்.11க்கு பிறகு புதிய வீடுமனை வாகனம் வாங்க யோகம் உண்டாகும். உடல் நலம் சீராக இருக்கும். சூரியனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. லாபம் படிப்படியாக அதிகரிக்கும். செவ்வாயால் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். போட்டியாளர்களால் இடையூறு தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். மார்ச் 25,26,30,31ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மார்ச் 14,15ல் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு. பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
பணியாளர்கள் வேலைப் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். வருமானம் குறைவின்றி கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சற்று முயற்சித்தால் கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு வேறு இடத்திற்கு பணிமாற்றம் கிடைக்கும். ஏப்.11க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வளர்ச்சி காண்பர். மார்ச் 20,21,22 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சக பெண்கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர்.
அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கும். ஏப்.11க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு.
மாணவர்களுக்கு கல்வியில் விடாமுயற்சி தேவைப்படும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும்.
விவசாயிகள் எதிர்பார்த்ததை விட மகசூல் கிடைக்கும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை பெறுவர். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். ஏப்.11க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
பெண்களுக்கு பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். ஏப்.1,2ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வந்து சேரும். மார்ச் 4, ஏப்.9,10,11ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும். ஏப்.11க்கு பிறகு எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும்.
நல்ல நாள்: மார்ச் 14,20,21,22,23,24,27, 28,29, ஏப். 1,2,7,8,9,10,11
கவன நாள்: மார்ச் 15,16,17, ஏப்.12,13 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். தினமும் சூரியனை வணங்குங்கள்.சிவன் கோவில் வழிபாடு நன்மைக்கு வழிவகுக்கும். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.