சிருங்கேரி பாரதிதீர்த்த சுவாமி மார்ச் 25ல் சோழவந்தான் வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2017 11:03
சோழவந்தான் : சோழவந்தான் தென்கரை இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீசங்கரர் மடத்திற்கு சிருங்கேரி பாரதிதீர்த்த சுவாமி, விதுசேகரபாரதி சுவாமி மார்ச் 25ல் வருகின்றனர். அன்று மாலை 6:00 மணிக்கு வரும் சிருங்கேரி பாரதிதீர்த்த சுவாமிக்கு தென்கரை அக்ரஹார எல்லையில் கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் நவநீதகிருஷ்ணன்சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீசங்கரர் மடத்தில் சுவாமி விஜயம், இரவு 7:00 மணிக்கு துளிபாதபூஜை, ஸ்ரீசந்திர மெளலீஸ்வர பூஜை, இரவு 8.45 மணிக்கு அகிலாண்டேஸ்வரியம்மன், திரு மூலநாதர் சுவாமி கோயிலில் உபன்யாசங்கள் நடக்கிறது. மறுநாள் 26 வரை தங்கி பாதபூஜை மற்றும் ஆசி வழங்குகிறார். மாலை 5:00 மணிக்கு மந்திரஅக் ஷதை வழங்கி மதுரை புறப்பாடு நடக்கிறது.