காஞ்சிபுரம் சுரகரேஸ்வரர் கோவில் சீரமைப்பு துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2017 12:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுரகரேஸ்வரர் கோவில் சீரமைக்கும் வேலை துவங்கியுள்ளது. தரையில் கல் பதித்து, கோவில் விமானத்தில் சிதிலமடைந்தபகுதிகளை சீரமைக்கும் பணியும் நடக்க இருக்கிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றான சுரகரேஸ்வரர் கோவில் அமைந்துள்ள து. இங்குள்ள கோவில்கள் பெரும்பாலும் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கும், பின்னர் வந்த மன்னர்கள் ஆட்சி காலத்தில் அதில் கூடுதல் வேல ைசெய்திருப்பர்.இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட முழுமையான கோவிலாக கருதப்படுகிறது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோவில் வளாகத்தில் மண் தரையில் கல் பதித்து,விமானத்தில் சிதிலமடைந்த சிற்பங்களை பழமை மாறாமல் சீரமைக்கும் பணிதுவங்கியுள்ளது. இதில் முதலில் நுழைவு பகுதியில் இருந்து உள்ளே செல்லும் வழியில் கருங்கல் பதிக்கும் பணிக்காக சுண்ணாம்பு கலவை முதலில் பரப்பி, அதன் மேல் கருங்கல் பதிக்கப்படுகிறது. கோவில் விமானத்தில் பல சிற்பங்கள் உள்ளன. அவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும் நடக்க இருக்கிறது. இந்தபணி ஜூலை மாதத்திற்குள் முடித்து, அதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.