பதிவு செய்த நாள்
20
மார்
2017
12:03
பெ.நா.பாளையம்: ஏத்தாப்பூர், மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டு விழா கோலாகலமாக நடந்தது. ஏத்தாப்பூர், வசிஷ்ட நதிக்கரையில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், இரண்டாம் முறையாக, பூச்சாட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், காலை 9:00 மணிக்கு, பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, சமயபுரம் மாரியம்மனுக்கு பூக்கள் எடுத்துக்கொண்டு ஊர்வலம் வந்தனர். பின், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. இதில், பூக்களின் நடுவே, மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.