மதுரை : மலைக்கு கடவுள் முருகன்தான். அவர்தான் திருப்பதியில் குடியிருந்தார். பாலன், பாலாஜி முருகனுக்கு உரிய பெயர். பின்னாளில் பெருமாள் வந்தார், எனஆன்மிக சொற்பொழிவாளர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் பேசினார். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த திருமுருகன் எம்பாவை குறித்த ஆன்மிகத்தொடர் சொற்பொழிவின் இறுதி நாளான நேற்று அவர் பேசியதாவது: முருகனை வேண்டினால் ஊழ்வினை போய்விடும். அவர் உலகை படைத்து, வளர்த்து, அழிப்பதை ஆதிசேடனாலும் சொல்ல முடியாது. அவர் பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் குமாரன். அவர் இருக்கும் வயலுார், திருமலையை பாடி நோன்பிருப்போம். திருத்தணி, திருவண்ணாமலை எல்லா பகுதியிலும் வாழ்பவன் முருகனே. சிபிசக்கரவர்த்தியும், அரிசந்திரனும் வழிபட்ட முருகனை, குன்றக்குடியிலும் கதிர்காமத்திலும் மதுரையிலும் வாழ்பவனை நம் கைகளால் வழிபட்டு பணி செய்வோம். திருமுருகன் எம்பாவை பாடுபவர்கள் மெய்யான இன்பம் பெறுவர். பசு பத்து படி பால் கொடுக்கும். நெல் விளைந்து நாடு உயரும். மலைக்கு கடவுள் முருகன்தான். பாலன், பாலாஜி முருகனுக்கு உரிய பெயர். அவர்தான் திருப்பதியில் குடியிருந்தார். பின்னாளில் பெருமாள் வந்தார். பல நுாற்றாண்டு களுக்கு முன்னர் கச்சியப்ப சிவாசாரியார் கந்தபுராணத்தில் இது குறித்து பாடியுள்ளார், என்றார். தமிழ் இசைச் சங்க மூத்த அறங்காவலர் மோகன் காந்தி, வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் பங்கேற்றனர்.