பதிவு செய்த நாள்
20
மார்
2017
05:03
தர்மபுரி: பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சண காசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் அபிேஷகம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சண காசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பங்குனிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிேஷகங்கள், 1008 அர்ச்சனை, 28ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.தரிசனம் முடித்த பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தி, கோவிலை, 18 முறை சுற்றி வலம் வந்து வணங்கினர். பகல், 12:00 மணிக்கு, உற்சவ காலை பைரவர், கோவிலை, மூன்று முறை சுற்றி தேரில் வலம் வந்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.