பதிவு செய்த நாள்
22
மார்
2017
11:03
திருநீர்மலை: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழாவான ஏழாம் நாள் நாளில், தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா, சிறப்பாக நடைபெற்றுவருகிறது. திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, நீர்வண்ண பெருமாளுக்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பிரம்மோற்சவ விழா நடக்கும். இந்தாண்டு, 10 நாட்கள் பிரம்மோற்சவ விழாவில், ஐந்தாம் நாளில் கருடசேவை சிறப்பாக நடைபெற்றது. இன்று(மார்.22) ஏழாம் நாளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.