திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2017 11:03
திருப்புவனம்: திருப்புவனம் பூமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்புவனத்தின் காவல் தெய்வமான ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி விழா 10 நாட்கள்சிறப்பாக நடைபெறும். சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் தினசரி தீச்சட்டி, மாவிளக்கு ஏற்றி நேர்த்திகடன் செலுத்துவார்கள். இந்தாண்டு பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. கொடி மரத்திற்கு செந்தில் பட்டர், கண்ணன் பட்டர், சாமிக்கண்ணு பட்டார் சிறப்பு அபிஷேகம் செய்து கொடியேற்றத்தை நடத்தினர். பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். 28ம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் நேர்த்திக்கடன் பக்தர்கள் பொம்மை, அக்னிசட்டி ஏந்தி வந்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.