திருத்தணி: கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலின், மகா கும்பாபிஷேகம், வரும், 10ம் தேதி நடைபெற உள்ளதால். பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி நந்தியாற்றின் ஓரம் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், 1999ம் ஆண்டு, நவம்பர் மாதம் நடந்தது. தொடர்ந்து, வரும் 10ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் தீர்மானித்து அதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. தற்போது, கோவிலின் உட்புறத்தில் மோட்டார் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து, கோவில் சுவர்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோவில் திருப்பணிகளும், துரித வேகத்தில் நடந்து வருகின்றன.