கள்ளக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2017 11:03
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருத்தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. மயானத்தில், நேற்று முன்தினம் காட்டேரி ஊர் சுற்றுதல், பகல் 12:00 மணிக்கு சுவாமி மயானம் சென்று கொள்ளை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து வீதியுலா உற்சவம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு காளி கோட்டை இடித்தலுக்கு பின், 10:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பருவதராஜகுல மீனவ சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.