பதிவு செய்த நாள்
23
மார்
2017
11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 26ல், மண்டல பூஜை நிறைவு விழா நடக்க உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 6ல் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில் வரும், 26ல் மண்டலாபிஷேக பூஜை நிறைவு பெறுகிறது. இதையொட்டி, 25 மாலை சிறப்பு யாக சாலை அமைக்கப்பட்டு ஹோமம் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து, 26 உச்சி கால பூஜையின்போது, அனைத்து சன்னதிகளிலும், யாகசாலையில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு மஹா அபிஷேகம் செய்விக்கப்படும். இதையடுத்து மண்டல நிறைவு பூஜை நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.