பழநி: பழநி முருகன் கோயில் ரோப்கார், பராமரிப்பு பணிகளுக்காக நாளை முதல் இரண்டு நாட்கள் நிறுத்தப்பட உள்ளது.பழநி மலைக் கோயிலுக்கு மூன்று நிமிடத்தில் செல்லும் வகையில் காலை 7 மணி முதல் இரவு 9 வரை ரோப் கார் இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக நாளை (மார்ச் 24) முதல் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது.பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின், மார்ச் 26 முதல் இயக்கப்படும்.