பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியலில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்தது. பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமை தாங்கினார். ஆய்வாளர் சுபத்ரா, தொழிலதிபர் சீனுவாசன் முன்னிலை வகித்தனர். உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கையை எண்ணியதில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 437 ரூபாய் இருந்தது.