Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் ... மனிதனாக வாழ ஆன்மீகம் வேண்டும்: சிருங்கேரி சாரதாபீட சுவாமிகள் அருளுரை மனிதனாக வாழ ஆன்மீகம் வேண்டும்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரளயகாலேஸ்வரர் கோவில் குளம் துார் வாரப்படுமா?
எழுத்தின் அளவு:
பிரளயகாலேஸ்வரர் கோவில் குளம் துார் வாரப்படுமா?

பதிவு செய்த நாள்

23 மார்
2017
11:03

பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெண்ணாடம் பிரள‌யகாலேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் வார, மாத வழிபாடுகள் சிறப்பாக நடக்கும். சித்திரை மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். சித்திரை திருவிழாவில் 9ம் நாள் தேர் திரு விழாவும், 10ம் நாள் தெப்பல் உற்சவமும் நடப்பது வழக்கம். ஆனால், கோவில் குளம் பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் இருப்பதால்,  சம்பு, கோரை புற்கள் அதிகளவில் மண்டியுள்ளன. இதனால் பல ஆண்டுகளாக தெப்பல் உற்சவம் நடத்துவது  நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பாராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் கோவில் குளத்தில், அருகில் வசிப்பவர்கள் கழிவு நீரை விட்டனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குளத்தை பார்வையிட்டு, அதில் கழிவு நீர் விடும் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்க செயல் அலுவலர் கொளஞ்சிக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, கழிவு நீர் விடுவது நிறுத்தப்பட்டது.  கடந்த 3 மாதங்களுக்கு முன் குளம் துார்வாரும் பணி துவங்கிய நிலையில்,  இந்தாண்டு சித்திரை தேர் திருவிழாவின் போது தெப்ப உற்சவம் நடக்கும் என பக்தர்கள், பொது மக்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் ஒரு நாள் மட்டுமே நடந்த துார் வாரும் ப‌ணி கிடப்பில் போடப்பட்டதால் பொது மக்கள், பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே, பிரளயகாலேஸ்வரர் கோவில் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar