பதிவு செய்த நாள்
24
மார்
2017
11:03
திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அடுத்த மாதம், 9ம் தேதி தீமிதி திருவிழா நடை பெறுகிறது. திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, நேற்று, காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை , கணபதி, நவக்கிரக ஹோமம், கோபூஜை, யாகசாலை பூஜை நடந்தது. நேற்று, காலை , 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மூலவர் அம்மனுக்கு, காலை , 8:00 மணிக்கு, சந்தனகாப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடை பெறுகிறது. வரும், 29ம் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், அன்னதானம் மற்றும் இரவு திரவுபதி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. வரும், 31ம் தேதி, சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம், அடுத்த மாதம், 9ம் தேதி,காலை துரியோதனன் படுகளம், மாலை, 6:30 ம ணிக்கு தீமிதி திருவிழாவும், 11ம் தேதி, காலை , 11:00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.